Published : 11 Jan 2019 08:20 AM
Last Updated : 11 Jan 2019 08:20 AM
மசூதிக்குள் பெண்கள் செல்ல இஸ்லாம் மார்க்கத்தில் தடை யில்லை என்று ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவர் ஃபாகிரா தெரிவித்துள்ளார்.
சபரிமலை செல்லும் வழியில் உள்ள வாவர் மசூதிக்கு சென்ற பெண்கள் உட்பட 6 பேர் கைது என்ற செய்தி, ‘இந்து தமிழ்’ நாளி தழில் கடந்த 9-ம் தேதி வெளி யானது. மசூதிக்குள் பெண்கள் செல்ல இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி கிடையாது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டி ருந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்து ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவர் ஃபாகிரா கூறியதாவது:
மசூதிக்குள் சென்று பெண்கள் தொழுகை நடத்துவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. ஆனால் ஆண்கள் - பெண்கள் தொழுகை நடத்த மசூதிக்குள் தனித்தனியாக இடம் இருக்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பாலான மசூதிகளில் பெண் கள் தொழுகை நடத்த தனி இடம் இல்லாததால், மசூதிக்கு பெண்கள் வருவது இல்லை.
பண்டிகை காலங்களில் பெண் கள் தொழுகை நடத்த மசூதிக்குள் தனியாக இடம் ஒதுக்கப்படுவதால், அப்போது பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்துகின்றனர். பெண்கள் அடிக்கடி வரும் மசூதி களில் அவர்களுக்கென நிரந்தர மாக தொழுகை நடத்த தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான அனைத்து உரிமைகளும் இஸ்லாம் மார்க்கத் தில் உள்ளன. ஆனால், இஸ்லாம் மார்க்கம் பெண்களை அடிமைப் படுத்துவது போன்ற மாயத் தோற் றத்தை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT