Published : 17 Jan 2019 08:30 AM
Last Updated : 17 Jan 2019 08:30 AM
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்ற மக்கள் சென்னை திரும்புவதற்கு வசதி யாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து இன்று (17-ம் தேதி) மாலை முதல் வரும் 20-ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 13,871 அரசு பேருந் துகள் மூலம் 7 லட்சத்து 17 ஆயி ரத்து 392 பேர் பயணம் செய் துள்ளனர். இதேபோல் ரயில்கள், ஆம்னி பேருந்துகள், சொந்த வாக னங்களிலும் மக்கள் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்திருப்பார் கள் என போக்குவரத்து புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, பொங்கல் பண்டிகை இன்று நிறைவடைய வுள்ள நிலையில் இன்று மாலை அல்லது இரவில் சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு வருவார்கள். எனவே, மக்களின் வசதிக்காக பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, முக்கிய பகுதிகளில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 7,841 சிறப்பு பேருந்துகளும் சென்னைக்கு மட்டும் 3,776 சிறப்பு பேருந்துகளும் இயக்கப் படவுள்ளன.
சிறப்பு குழுக்கள் அமைப்பு
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொங்கல் பண்டிகையை முடித்து விட்டு சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு திரும்பும் மக்களின் வசதிக்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தேவையான அளவுக்கு பேருந்து களை இயக்க அரசு போக்கு வரத்து கழகங்களுக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. மேலும், சுங்கச்சாவடிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரி சலை குறைக்க போக்குவரத்து போலீஸ் மற்றும் வட்டார போக்கு வரத்து அதிகாரிகள், ஆய்வாளர் கள் இணைந்து பணியாற்றவும் சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT