Published : 17 Jan 2019 10:47 AM
Last Updated : 17 Jan 2019 10:47 AM

பேராவூரணியில் திருவள்ளுவர் தினத்தில் 20-வது ஆண்டாக ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கிய ‘திருக்குறள் தாத்தா’

பேராவூரணியில் 20-வது ஆண்டாக திருவள்ளுவர் தினத்தன்று(நேற்று) முதியவர் ஒருவர் திருக்குறளின் பெருமைகளைச் சொல்லி ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்தவர் தங்கவேலனார்(70). பேராவூரணி பேருந்து நிலையம் அருகே தேநீர் கடை நடத்தி வருகிறார். இவர் தனது கடை வாசலில் கரும்பலகையில் தினமும் ஒரு திருக்குறளை எழுதி, அதன் பொருள் விளக்கம் எழுதுவது வழக்கம். அத்துடன் மாணவர்களுக்கு அவ்வப்போது திருக்குறள் வகுப்பு எடுத்து வருவதால், இவரை அப்பகுதியில் திருக்குறள் தாத்தா என்றே அழைக்கின்றனர்.

மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி வருகிறார். அதன்படி, திருவள்ளுவர் தினமான நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு ஒரு ரூபாய்க்கு தேநீர் வழங்கி, திருக்குறளின் பெருமைகளை விளக்கினார்.

இதுகுறித்து தங்கவேலனார் கூறியதாவது:

திருக்குறள் சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி போராடி வருகிறோம். திருக்குறள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவரது பிறந்த நாளான திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய்க்கு தேநீர் விற்பனை செய்து வருகிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x