Published : 27 Dec 2018 09:37 AM
Last Updated : 27 Dec 2018 09:37 AM

சசிகலா, தினகரனை தவிர யார் வந்தாலும் ஏற்பதாக அமைச்சர் கருத்து

சசிகலா, தினகரனைத் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கூட்டுறவு சங்கத்தின் புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்ற அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: தினகரனையே நாங்கள் மதிப்பதில்லை. அவருடன் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அதிமுக, அமமுக இணைவதாக இருந் தால் சசிகலா, தினகரனை தவிர்த்து யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள் வோம். 40 நாடாளுமன்ற தொகுதியிலும் அதிமுக வலுவாகவே இருக்கிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்ககொள்ள மாட்டார்கள். இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x