Published : 02 Dec 2018 05:38 PM
Last Updated : 02 Dec 2018 05:38 PM
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாகத்தை போற்றும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் அவரது திருவுருவப்படத்தை நிறுவ வேண்டுமென வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தலைமையில் பாஜகவினர் இந்த மனுவை அளித்தனர். மக்களவை சபாநாயகரும் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். அப்போது பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT