Published : 16 Nov 2018 10:00 AM
Last Updated : 16 Nov 2018 10:00 AM

ஐஆர்சிடிசி சார்பில் மலேசியா, துபாய்க்கு விமான சுற்றுலா

தைப்பூசத்தை முன்னிட்டு மலேசியா, துபாய் மற்றும் அபுதாபி செல்ல விமான சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்திய உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் மூலம் பல்வேறு சுற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந் நிலையில், வரும் ஜனவரி தைப் பூசத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து மலேசியாவுக்கு வரும் ஜனவரி 20-ம் தேதி சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய் துள்ளோம். 4 நாட்கள் சுற்றுலாவுக்கு ஒருவருக்கு ரூ.33,000 கட்டணம் வசூலிக்கப்படும்.

துபாய் மற்றும் அபுதாபிக்கு வரும் ஜனவரி 26-ம் தேதியில் செல்ல விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்கள் கொண்ட இந்தச் சுற்றுலா செல்ல ஒருவருக்கு ரூ.52,900 கட்டணமாகும். விமானக் கட்டணம், 3 ஸ்டார் ஹோட்டல் தங்கும் வசதி, நுழைவு கட்டணம், உணவு, வீசா உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இது தொடர்பாக மேலும் தகவல்களைப் பெற 9003140718 என்ற எண்ணை தொடர்பு கொள்ள லாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x