Published : 24 Oct 2018 12:27 PM
Last Updated : 24 Oct 2018 12:27 PM

மனைவி தனிக்குடித்தனம் கோரியதால் விரக்தி: கணவர் தீக்குளித்து தற்கொலை; காப்பாற்ற முயன்ற மனைவியும் உயிரிழந்த சோகம்

மனைவி தனிக்குடித்தனம் கோரியதால் விரக்தியடைந்த கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். கணவரைக் காப்பாற்ற முயன்ற மனைவியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டியில் பாதிரியாராக உள்ளவர் ரிச்சர்ட் ப்ராங்க்ளின் (30). இவர் திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஆட்டையாம்பாளையத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியுள்ள தனது மனைவி ஆசிய ஜெர்சியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால், ஆசிய ஜெர்சி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் எனக் கேட்டு உடன் செல்ல மறுத்துள்ளார்.

இதில் மனமுடைந்த ரிச்சர்ட் ப்ராங்க்ளின் மனைவியின் வீட்டின் முன் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். அவரின் அலறல் கேட்டு காப்பாற்ற வந்த மனைவியும் பலத்த தீக்காயம் அடைந்தார். இருவரையும் மீட்ட அப்பகுதியினர் கோவை மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆசிய ஜெர்சி உயிரிழந்தார். அதன்பிறகு, சிறிதுநேரத்தில் கணவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x