Published : 01 Jun 2018 10:21 AM
Last Updated : 01 Jun 2018 10:21 AM

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீண்டும் சிறையில் அடைப்பு

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சுங்கச் சாவடியை உடைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீர்சத்து குறைவின் காரணமாகவும், சிறுநீரகப் பிரச்சினையாலும் வேல்முருகன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய போலீஸார் அவர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்தனர்.

என்எல்சி அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியபோது அவர் பேசிய பேச்சுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தாகக் கூறப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நேற்று ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர், அவரை புழல் மத்தியை சிறைக்கு கொண்டு சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x