Published : 03 Jun 2018 07:56 AM
Last Updated : 03 Jun 2018 07:56 AM

18-ம் தேதி முதல் சரக்கு லாரிகள் வேலைநிறுத்தம்

அகில இந்திய சரக்கு லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.சன்னா ரெட்டி கூறியதாவது:

நாடு முழுவதும் 80 லட்சம் சரக்கு லாரிகள் ஓடுகின்றன. இந்நிலையில், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. காப்பீட்டுத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

எங்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை எனில் ஜூன் 18-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தோம்.

அதன்படி, வரும் 18-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் உறுதியாக ஈடுபடுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x