Published : 28 May 2018 08:55 AM
Last Updated : 28 May 2018 08:55 AM

பயணிகள் கூட்டம் அதிகரித்தால் இரண்டரை நிமிடத்துக்கு ஒரு ரயில் சேவை

மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும்போது சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு இரண்டரை நிமிடத்துக்கு ஒரு சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறும்போது, சென்ட்ரல், எழும்பூர் மின்சார ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையம் இணைக்கப்பட்டுள்ளதால் மெட்ரோ ரயில்களில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சமாக உயரும்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகபட்சமாக 50 நிமிடங்களிலும், டிஎம்எஸ் இருந்து விமான நிலையத்துக்கு 22 நிமிடங்களிலும் பயணம் செய்ய முடியும். மக்கள் கூட்டம் அதிகரிக்கும்போது, அதிகபட்சமாக 2.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்சேவை இயக்கப்படும். மேலும், அதிகாலையில் 4 மணிக்கே மெட்ரோ சேவை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x