Published : 26 May 2018 10:07 AM
Last Updated : 26 May 2018 10:07 AM

பராமரிப்பு பணி நடப்பதால் இன்றும், நாளையும் 18 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்றும், நாளையும் 18 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை கடற்கரை - வண்ணாரப்பேட்டை இடையே மே 26, 27 தேதிகளில் பராமரிப்பு பணி நடக்க உள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (ரயில் புறப்படும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.)

இன்று ரத்தாகும் ரயில்கள்

வேளச்சேரி - ஆவடி காலை 10.15, வேளச்சேரி - திருவள்ளூர் நண்பகல் 12.15, வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் நண்பகல் 12.55, சென்ட்ரல் - ஆவடி நண்பகல் 12.35, சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 9.30, ஆவடி - வேளச்சேரி பிற்பகல் 2.40, திருவள்ளூர் - சென்ட்ரல் பிற்பகல் 2.40, ஆவடி - கடற்கரை பிற்பகல் 1.35, திருவள்ளூர் - வேளச்சேரி காலை 11.05 மணி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருவள்ளூர் - வேளச்சேரி மதியம் 1.40 மணி மின்சார ரயில் திருவள்ளூரில் இருந்து ஆவடி வரை மட்டுமே இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பிற்பகல் 2.40 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாளை ரத்தாகும் ரயில்கள்

கடற்கரை - ஆவடி காலை 11.10, கடற்கரை - திருவள்ளூர் பிற்பகல் 1.05, கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் பிற்பகல் 1.50, சென்ட்ரல் - ஆவடி நண்பகல் 12.35, சென்ட்ரல் - திருவள்ளூர் காலை 9.30, ஆவடி - கடற்கரை பிற்பகல் 2.40, திருவள்ளூர் - சென்ட்ரல் பிற்பகல் 2.40, ஆவடி - கடற்கரை பிற்பகல் 1.35, திருவள்ளூர் - கடற்கரை காலை 11.05 மணி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

திருவள்ளூர் - கடற்கரை பிற்பகல் 1.40 மணி மின்சார ரயில் திருவள்ளூரில் இருந்து ஆவடி வரை மட்டும் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இடையே பிற்பகல் 2.40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x