Published : 04 May 2018 09:34 AM
Last Updated : 04 May 2018 09:34 AM
சென்னை மாநகர மக்கள் தங் கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் ‘நம்ம சென்னை’ என்ற புதிய ஸ்மார்ட் கைபேசி செயலி சேவையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி கடந்த ஜனவரியில் தொடங்கிவைத்தார். இதன்மூலம் பெறப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன் மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை புகார்தாரருக்கு அந்த செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குறைகள் தாமதமின்றி உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்.
‘நம்ம சென்னை’ செயலி மூலமாக இதுவரை மொத்தம் 2,977 புகார்கள் பதிவு செய்யப்பட்டு, பெரும்பாலான புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுளளது. இந்த செயலியை இதுவரை 23,970 பேர் தங்கள் கைபேசி யில் பதிவிறக்கம் செய்துள் ளனர். இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT