Published : 24 Apr 2018 08:44 AM
Last Updated : 24 Apr 2018 08:44 AM
தான் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அதற்கான தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா புறப்படும் முன்பு நேற்று தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களி டம் அவர் கூறியதாவது:
துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி எனது நீண்ட நாளைய நண்பர். அவரை சந்திப்பது வழக்கமானது. அரசியலில் இறங்கிய பிறகு விமர்சனங்கள் வரத்தான் செய்யும். அதனை தவிர்க்க முடியாது. நான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி. அதற் கான தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. அதுதொடர்பாக நடந்து வரும் ஆலோசனைகளை வெளிப்படையாகக் கூற முடியாது.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை பேராசிரியர் நிர்மலா தேவி தவறான பாதைக்கு அழைத்தது அவமானகரமானது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் கூறிய கருத்துகள் மன்னிக்க முடியாத குற்றம். காவல் துறையினர் மீது எப் போது தாக்குதல் நடத்தினாலும் அது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு ரஜினி கூறினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மீதான குற்றச்சாட்டுகள், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவின் சர்ச்சைக்குரிய முகநூல் பதிவு குறித்த கேள்விகளுக்கு ரஜினி பதிலளிக்க மறுத் துவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT