Published : 05 May 2024 04:04 AM
Last Updated : 05 May 2024 04:04 AM

கம்போடியாவில் மாயமான மசினகுடி இளைஞரை மீட்க ஆ.ராசா எம்.பி. கோரிக்கை

எம்பி ஆ.ராசா

உதகை: கம்போடியாவில் காணாமல் போன இளைஞரை மீட்டுத் தரக்கோரி நீலகிரி எம்பி ஆ.ராசா மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது: உதகை அருகேயுள்ள மசினகுடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் ஷியாம் சுந்தர் என்பவர் கம்போடியாவில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் முதல், பெற்றோருடனான தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளார்.

அவரது செல்போனை கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அவரது பெற்றோர் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். எனவே, கம்போடியாவில் பணியாற்றி வந்த ஷியாம் சுந்தர் குறித்து விசாரணை மேற்கொண்டு, பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x