Published : 20 Apr 2024 08:45 AM
Last Updated : 20 Apr 2024 08:45 AM

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்: அண்ணாமலை ஆவேசம்

அண்ணாமலை | கோப்புப்படம்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத் தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது பெற்றோருடன் நேற்று வாக்களித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் அனைவரும் வாக்களித்து, ஜனநாயகக் கடமையை நிறை வேற்றினால்தான் நாட்டில் நல்லாட்சி உருவாகும். கோவையில் வாக்காளருக்கு பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலை விட்டுவிலகத் தயார்.

இந்த தேர்தல் பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இருக்கும். இந்த தேர்தல் நேர்மையான, அறம் சார்ந்த, வெளிப்படையான தேர்தலாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x