Published : 19 Apr 2024 06:15 AM
Last Updated : 19 Apr 2024 06:15 AM

மருந்து ஆய்வாளர் பதவிக்கு ஏப்.24-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: இளநிலை மருந்து ஆய்வாளர் பதவிக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய இளநிலை மருந்து ஆய்வாளர் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் 24-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இணையத்தில் வெளியீடு: இதற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுக்கான அழைப்பாணை கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

மறுவாய்ப்பு இல்லை: தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி ஒதுக்கீடுவழங்கப்படும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதாலேயே பணி ஒதுக்கீடு கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராத தேர்வர்களுக்கு எக்காரணம் கொண்டும் மறுவாய்ப்பு வழங்கப்படாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x