Published : 18 Mar 2024 06:06 AM
Last Updated : 18 Mar 2024 06:06 AM

சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்றும், நாளையும் ( மார்ச் 18,19) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் பொன்னேரி -மீஞ்சூர் இடையே சீரமைப்பு பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.30, 10.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டிக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்,எண்ணூர் - கும்மிடிப்பூண்டி இடையேபகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரைக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - எண்ணூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

சூலூர்பேட்டை - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 18, 19 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்,கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருப்பதி ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி காரணமாக, சில மெமு விரைவு ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட உள்ளன. அதன்படி, சென்னை சென்ட்ரல் - திருப்பதிக்கு மார்ச் 18-ம் தேதிகாலை 9.50 மணிக்கு புறப்படும் மெமுவிரைவு ரயில், ரேணிகுண்டா - திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படஉள்ளது.

திருப்பதி - சென்னை சென்ட்ரலுக்கு மார்ச் 18-ம் தேதி மதியம் 1.35 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு விரைவு ரயில்,திருப்பதி - ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த ரயில் ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x