Published : 14 Feb 2024 06:04 AM
Last Updated : 14 Feb 2024 06:04 AM

அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.50 கோடி லஞ்சம் விவகாரம்; போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் - அமலாக்கத்துறை விளக்கம்

சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.50 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் போலி நிறுவனங்கள் மூலம் பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை கண்டறிந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் இயங்கிவந்த பின்னி மில் வளாகத்தில் உள்ள 14.16 ஏக்கர் நிலம்கடந்த 2015-ம் ஆண்டு விற்கப்பட்டது. இந்த நிலத்தை சென்னை தியாகராயநகரில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் உதயகுமார், பெரம்பூரில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுனில் கட்பலியா, மணீஷ் சர்மா ஆகியோர் இணைந்து ரூ.450 கோடிக்கு வாங்கினர்.

இந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு, வணிக வளாகம் கட்டுவதற்கும் அனுமதி பெறுவதற்கும், அங்குஏற்பட்ட இடர்பாடுகளை நீக்குவதற்கும் நிறுவனத்தினர் எம்பி, எம்எல்ஏ, கவுன்சிலர் உட்பட பல்வேறு தரப்பினருக்கு ரூ.50 கோடியே 86 ஆயிரம்லஞ்சமாக வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த லஞ்ச பணம்கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மாதம் 31-ம் தேதி வழக்குப் பதிவு செய்து, மறுநாள் 5 இடங்களில் சோதனை நடத்தியது. இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கில்தொடர்புடைய கட்டுமான நிறுவனங்களின் நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் கடந்த 9-ம் தேதி திடீர் சோதனை நடத்தியது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்த லஞ்ச விவகாரத்தில் லஞ்சஒழிப்புத் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் விசாரணைநடத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாகசட்ட விரோத பணபரிமாற்ற சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆதாரங்களை திரட்டும் வகையில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையில் முக்கிய ஆவணங்கள், வணிக ஆவணங்கள், அசையும்மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இவ்வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில்அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசியல்வாதிகள், அரசுஉயர் அதிகாரிகளுக்கு லஞ்சம்கொடுக்கப்பட்டதன் மூலம் சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.

தீவிர விசாரணையில், இந்ததிட்டத்துக்கான நிதியை திரட்டுவதற்காக, போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இந்த நிறுவனங்களின் பணபரிமாற்றத்தை யாரும் கண்டறிய முடியாத அளவுக்கு சிக்கலானதாக உருவாக்கியுள்ளனர். இவ்வாறு கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமல்லாமல் மதுபானவியாபாரத்துக்கும், சட்டவிரோதநடவடிக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனர்.

ரூ.280 கோடி: இத்திட்டத்துக்காக சட்டவிரோதமாக ரூ.280 கோடியை மெரீட்டியஸ் (Mauritius route) பரிமாற்றம் மூலம்பெற்றுள்ளனர். இந்த நிதி மூலமாகவே அந்த இடத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரத்தில் நீலகண்டன் என்பவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அனைத்து பண பரிமாற்றங்களும் நீலகண்டன் ஏற்பாட்டின் பேரிலேயே நடந்துள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x