Published : 08 Feb 2018 07:30 AM
Last Updated : 08 Feb 2018 07:30 AM
காஞ்சிபுரத்தில் உள்ள ஏ.எஸ்.பாபுஷா மற்றும் பிரகாஷ் சில்க்ஸ் ஆகிய கடைகளில் நேற்று முன்தினம் காலையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தத் தொடங்கினர். நேற்று அதிகாலை 5 மணி வரை பாபுஷா கடையில் சோதனையைத் தொடர்ந்த அதிகாரிகள், அங்கிருந்து சில முக்கிய ஆவணங்களைப் கைப்பற்றிச் சென்றனர்.
பிரகாஷ் சில்க்ஸில் தொடர்ந்து நேற்று மாலை வரை வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, பல ஆவணங்களை கைப்பற்றியதாகத் தெரிகிறது. சோதனையில் சிக்கிய துணிக் கடைகளில் ஒரு கடை மட்டும் தாதா ஸ்ரீதருடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வருமான வரி சோதனை குறித்து வரு மான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “இது தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT