Published : 05 Feb 2018 08:21 AM
Last Updated : 05 Feb 2018 08:21 AM
தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் தலைவர் ஐ.அருள்அறம், செயலாளர் கே.சதாசிவம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக பல்கலைக்கழக வரலாற்றிலேயே முதல்முறையாக பதவியில் உள்ள துணைவேந்தர் ஒருவர் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழக நிர்வாக முறை பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டிருப்பதை இது எடுத்துக்காட்டுகிறது. துணைவேந்தர் கைது சம்பவம் பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மைப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை வேகப்படுத்தும்.
பல்கலைக்கழக ஆசிரியர் நியமனங்கள் மற்றும் தேர்வுமுறையில் முறைகேடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சூழலானது, உயர்கல்வியின் அரணாக திகழும் பல்கலைக்கழகங்களின் உறுதியை ஆட்டம்காணச் செய்திருக்கிறது.
தகுதி அடிப்படையில் இல்லாமல் வேறு காரணிகளால் துணைவேந்தர்கள் நியமிக்கப்படும்போது அது ஆசிரியர் நியமனங்களில் முறைகேடுகள் நடப்பதற்கே வகைசெய்யும். பல்கலைக்கழக நிர்வாகத்தை தூய்மைப்படுத்த வேந்தரான ஆளுநர் மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் நியமனங்கள் லஞ்சம் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டுமானால் ஆசிரியர் நியமனங்கள் வெளிப்படையாக நடைபெற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT