Published : 06 Feb 2018 08:36 AM
Last Updated : 06 Feb 2018 08:36 AM
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப்படகில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
வைகோ: பிப். 23, 24- நடைபெறவுள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு நாட்டுப் படகில் (வல்லம்) செல்லும் பாரம்பரிய மீனவர்களுக்கு இலங்கை அரசு தடை விதித்து அனுமதி மறுப்பது வன்மையக கண்டிக்கத்தக்கது.
ஜி.கே.வாசன்: சுமார் 100 ஆண்டுகளாக கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வழிபாட்டுக்காக மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் நாட்டுப்படகில் சென்று வந்ததை மத்திய அரசு தடுப்பது ஏற்புடையதல்ல. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, கச்சத்தீவு திருவிழாவுக்கு பாரம்பரிய மீனவர்கள் வழக்கம் போல் நாட்டுப்படகில் செல்ல அனுமதி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும்.
தமிழக மீனவர் பிரச்சினையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக மீனவர்களின் பாரம்பரியம் மிக்க ஆலய வழிபாட்டுக்கு மீனவர்கள் நாட்டுப்படகில் சென்று வர அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT