Published : 28 Dec 2023 10:10 AM
Last Updated : 28 Dec 2023 10:10 AM

வெள்ள நிவாரண டோக்கன் வாங்க தூத்துக்குடியில் அலைமோதும் கூட்டம்

தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட வெள்ள நிவாரண டோக்கனை பெற நீண்ட வரிசையில் காத்து நின்ற பொதுமக்கள் . | படம்: என்.ராஜேஷ் |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது. டோக்கன் வாங்க தூத்துக்குடியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவை குண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்ட வட்டங்களாகவும், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு வட்டங்கள் குறைந்த அளவு பாதிப்புள்ள வட்டங்களாகவும் கண்டறிய ப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் 185 வருவாய் கிராமங் களும், 508 நியாயவிலைக் கடைகளும் உள்ளன. இதில் 3,21,053 குடும்ப அட்டைகள் உள்ளன. நியாயவிலைக் கடை பணியாளர்கள் நியாயவிலைக் கடை பகுதியில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து டோக்கன் வழங்கி வருகின்றனர். மக்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து டோக்கன் பெற்றுச் செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x