Published : 28 Jan 2018 09:19 AM
Last Updated : 28 Jan 2018 09:19 AM
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர் பாக புழல் சிறையில் உள்ள நாதுராம் மற்றும் கூட்டாளிகளை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராஜமங்கலம் குற்றப்பிரிவு போலீ ஸார் நாளை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
வட சென்னை கூடுதல் காவல் ஆணையர் எச்.எம்.ஜெயராம் தலைமையிலான தனிப்படை போலீஸார், கொளத்தூர் நகைக் கடை கொள்ளை வழக்கு தொடர் பான பிடி ஆணையை ஜெய்தாரன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதையடுத்து ஜெய்தாரன் சிறையில் இருந்த நாதுராம் மற்றும் அவரது 2 கூட்டாளிகளும் சென்னை தனிப்படை போலீஸாரிடம் ஒப்படைக்கப் பட்டனர்.
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த நாதுராம் மற் றும் கூட்டாளிகள் தினேஷ் சவுத்ரி, புத்தாராம் ஆகியோரை சென்னை போலீ ஸார் விமானம் மூலம் நேற்று முன்தினம் அதிகாலை சென்னை அழைத்து வந்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க ராஜமங்கலம் குற்றப்பிரிவு போலீ ஸார் முடிவு செய்துள்ளனர். இதற்கான மனுவை எழும் பூர் நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்ய உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT