Published : 20 Jan 2018 02:01 PM
Last Updated : 20 Jan 2018 02:01 PM
நடிகர் சூர்யா உயரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக ரசிகர்கள் அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
நடிகர் சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில் சூர்யாவுடன் அமிதாப்பச்சன் இணைந்து நடிப்பதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தொகுப்பாளர்கள் இருவர், அவரது உயரத்தை குறித்து பேசி கிண்டலடித்தது திரையுலகில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் இன்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி அலுவலகம் முன் கூடினர். தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து கண்டன கோஷம் எழுப்பினர். உயரம் முக்கியம் அல்ல உயர்ந்த உள்ளமே முக்கியம் என கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர். இந்நிலையில் தரம் தாழ்ந்தவர்களை விமர்சனம் செய்து நாம் நமது தரத்தை தாழ்த்திக்கொள்ள வேண்டாம் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்ததை அடுத்து ரசிகர்கள் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT