Published : 08 Dec 2023 07:10 AM
Last Updated : 08 Dec 2023 07:10 AM

மிக்ஜாம் பாதிப்பு - சென்னையில் 3 நாட்களுக்கு பிறகு மின்சார ரயில்கள் வழக்கம்போல இயங்கின

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் கடந்த 3 நாட்களுக்கு பிறகு, மின்சார ரயில்கள் நேற்று வழக்கம்போல இயக்கப்பட்டன. இதனால், ரயில் பயணிகள் நிம்மதியடைந்தனர். `மிக்ஜாம்' புயல் காரணமாக, சென்னை எழும்பூர் - கடற்கரை, சென்னை சென்ட்ரல் - பேசின்பாலம், வியாசர்பாடி சுரங்கப்பாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது.பெரும்பாலான சீரமைப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று அதிகாலை முதல் வழக்கமான கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

இருப்பினும், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை வழித்தடத்தில் மின்சார ரயில்கள் சீராகவில்லை. இந்த வழித்தடத்தில் திருவொற்றியூர் - கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டைக்கு 30 நிமிடத்துக்கு ஒரு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x