Published : 09 Jan 2018 09:26 AM
Last Updated : 09 Jan 2018 09:26 AM
பஸ் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், பயணிகள் வசதியை கருத்தில்கொண்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (9-ம் தேதி) முதல் மறுஅறிவிப்பு வெளியிடப்படும் வரை கூடுதலாக 30 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் கூடுதலாக 4 இணை, சென்னை கடற்கரை - அரக்கோணம் வழித்தடத்தில் கூடுதலாக ஒரு இணை, அரக்கோணம் வழித்தடத்தில் ஒரு இணை, தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதலாக 9 மின்சார ரயில்கள், மூர்மார்க்கெட் வளாகம் – திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் கூடுதலாக 9 மின்சார ரயில்கள் என மொத்தம் 30 மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் இன்று முதல் மறுஅறிவிப்பு வெளியிடப்படும் வரை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT