Published : 11 Jan 2018 06:28 PM
Last Updated : 11 Jan 2018 06:28 PM
நீதிமன்றம் மத்தியஸ்தரை நியமித்ததாலும், பொதுமக்கள் நலன், பண்டிகை தினம் போன்றவற்றை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தம் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தொழ்ற்சங்கத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
நீதிமன்ற வளாகத்தில் தொழிற்சங்கத்தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் கூறியதாவது:
கிரிமினல் வழக்குகள், வேலை நிறுத்த காலத்தில் சம்பளம், ஊதிய உயர்வு எந்தத் தேதியில் இருந்து ஊதிய உயர்வு என்பதை முடிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை பார்த்த பின்னர் தான் எந்த முடிவும் சொல்ல முடியும். இதற்கு பின்னர் வாகனங்களை தொழிற்சங்கத்தினர் இயக்குவார்கள் என்று நம்புகிறேன். ஆகவே வேலை நிறுத்தம் முடிவுக்கு வரலாம்.
இவ்வாறு என்.ஜி.ஆர் பிரசாத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT