Published : 25 Jan 2018 09:28 AM
Last Updated : 25 Jan 2018 09:28 AM
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 29-ம் தேதி அனைத்து மாவட்டங் களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. பல்லாவரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக ஏழை, எளிய மக்கள் தினந்தோறும் குறைந்த கட்டணத்தில் அரசு பஸ்சை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஆளும் அதிமுக அரசு திடீரென்று வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, பஸ்சில் பயணிப்பதை கேள்விக்குறியாக்கி விட்டது. பஸ் கட்டண உயர்வுக்கு காரணமான தமிழக அரசை கண்டித்து தேமுதிக சார்பில் வரும் 29-ம் தேதி தமிழகம் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பல்லாவரத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்று பேசுகிறார். திருவள்ளூரில் பிரேமலதா விஜயகாந்த், திருச்சியில் எல்.கே.சுதீஷ் தலைமையிலும் நடைபெறும். இதில்,தேமுதிகவினர், திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT