Published : 09 Jan 2018 10:22 AM
Last Updated : 09 Jan 2018 10:22 AM

பரோல் கேட்டு ராஜீவ் காந்திகொலை கைதி வழக்கு: சிறைத்துறை ஏடிஜிபி பதிலளிக்க அவகாசம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் பி.ரவிச்சந்திரன். இவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் 26 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில் குடும்பச் சொத்து பாகப்பிரிவினைக்காக ரவிச்சந்திரனை பரோலில் விடுதலை செய்யக் கோரி, அவரது தாயார் ராஜேஸ்வரி 17.3.2017-ல் சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். மனுவை சிறை அதிகாரிகள் நிராகரித்தனர். இதனால் ராஜேஸ்வரி உயர் நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிறைத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கி சிறைத் துறை ஏடிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x