Published : 05 Jul 2014 10:00 AM
Last Updated : 05 Jul 2014 10:00 AM

ரூ.1000 கோடி பங்குகள் ஏலம் தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு ரூ.1000 கோடி மதிப்பிலான பங்குகளை ஏலம் மூலம் விற்பனை செய்யவுள்ளது. இதுகுறித்து அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரூ.1000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால் மும்பையில் உள்ள அதன் மும்பை – கோட்டை அலுவலகத் தில் ஜூலை 8-ம் தேதி நடத்தப்படும்.

போட்டி ஏலக் கேட்புகள் காலை 10.30 முதல் 12 மணிக் குள்ளும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் காலை 10.30 முதல் 11.30 மணிக்குள்ளும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் ஜூலை 8-ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x