Published : 31 Aug 2023 05:58 AM
Last Updated : 31 Aug 2023 05:58 AM

சென்னையில் ‘சூப்பர் ப்ளூ மூன்’

‘சூப்பர் ப்ளூ மூன்’ எனப்படும் அரிய நிகழ்வு நேற்று இரவு 8:37 மணிக்கு விண்ணில் நிகழ்ந்தது. மேக மூட்டம் காரணமாக சில நிமிடங்கள் மட்டும் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. வழக்கமாக தோன்றும் பவுர்ணமி நிலவைவிட கூடுதல் வெளிச்சத்துடன் தென்பட்டது.படம்: ம.பிரபு

சென்னை: பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் தென்படும். ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் (நீல நிலவு) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும்.

அந்தவகையில் ப்ளூ மூன் நிகழ்வு நேற்று நடந்தது. அதனுடன், புவிக்கு மிக அருகில் நிலவு வந்ததால், அதை சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வு என்றும் அழைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் முழு நிலவை முழுமையாக காணமுடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆகஸ்ட் மாதத்தின் 1-ம் தேதியிலும் பவுர்ணமி தென்பட்டது. தொடர்ந்து 2-வது முழு நிலவு நாளான நேற்று புளூ மூன் நிகழ்வு நடந்தது. இதற்குமுன் 2018, 2020 அக்டோபர் 21-ம் தேதியிலும் புளூ மூன் தென்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x