Published : 08 Nov 2017 09:04 AM
Last Updated : 08 Nov 2017 09:04 AM
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது.
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடித் தளத்தில் இருந்து 195 படகுகளில் 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதில், கே.செல்வமணி என்பவருக்குச் சொந்தமான படகில் நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்த எம்.ராஜ்குமார், எ.ஜகுபர், ஆர்.கஜேந்திரன் மற்றும் எஸ்.கருப்பையா ஆகியோரை, எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
4 மீனவர்களையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT