Published : 27 Nov 2017 06:37 PM
Last Updated : 27 Nov 2017 06:37 PM
சோழர் சாம்ராஜ்யம் பற்றிய பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்வீட் குறித்து 'தமிழ் படம்' இயக்குநர் சி.எஸ்.அமுதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரை நிகழ்ச்சியான மன் கி பாத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய கப்பற்படைக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, வரலாற்றில் சிவராஜ் சாம்ராஜ்ஜியம், சோழ சாம்ராஜ்ஜியத்தில் இருந்த கப்பற்படைகள் குறித்து நினைவுக்கூர்ந்தார்.
இதனைக் குறிப்பிட்டு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சோழ சாம்ராஜ்ஜியத்தை குறிப்பிட்டதற்கு நன்றி. பாஜக எப்போதும் வரலாற்றில் தமிழரின் பெருமையை தாங்கி நிற்கிறது” என்று பதிவிட்டுருந்தார்.
இந்தப் பதிவை குறிப்பிட்டு 'தமிழ் படம்' இயக்குநர் சி.எஸ் .அமுதன், “பழங்கால தமிழ் நாகரிகத்துக்கு ஒளி வீசக் கூடிய கீழடி அகழ்வாராய்ச்சியை மீண்டும் தொடங்கலாமா? கீழடி அகழ்வாராய்ச்சியை மத்திய அரசு ஏன் நிறுத்தியது என்று கூற முடியுமா? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT