Published : 22 Nov 2017 08:06 AM
Last Updated : 22 Nov 2017 08:06 AM
சென்னையில் குற்றங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி அவ்வப்போது சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு போலீஸார் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு அடிக்கடி ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று போலீஸ் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அதில், பணியை இன்னும் சிறப்பாக செய்யும்படி காவல் ஆணையர் உத்தரவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT