Published : 24 Nov 2017 09:39 AM
Last Updated : 24 Nov 2017 09:39 AM
முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்த நிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மாலை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தனர். அவர்களுடன் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உட்பட கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோரும் வந்திருந் தனர்.
அவர்களின் வருகையை முன்னிட்டு ஜெயலலிதாவின் சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதல்வரும், துணை முதல்வரும் ஒருசேர ஜெயலலிதா சமாதி மீது மலர் வளையம் வைத்தும், மலர்களை தூவியும் மரியாதை செலுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் முதல்வரும், துணை முதல்வரும் அருகில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கும், அண்ணா சமாதிக்கும் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு, அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT