Published : 25 Jul 2023 04:55 AM
Last Updated : 25 Jul 2023 04:55 AM

நில அளவைத்துறையில் 14 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு - வருவாய்த்துறை நடவடிக்கை

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 14 ஆய்வாளர்களுக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக வருவாய்த்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 2004 முதல் 2021-ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து ஆய்வாளர்களாக பணியாற்றிய 3 பேருக்கு உதவி இயக்குநர்களக பதவி உயர்வு வழங்கி உத்தரவுகள் வெளியிடப்பட்டன.

தற்போது 2022-ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்களுக்கு ஆய்வாளர்களாக உள்ள 14 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x