Published : 10 Nov 2017 09:11 AM
Last Updated : 10 Nov 2017 09:11 AM
எண்ணூர் காமராஜர் துறைமுகப் பகுதியில் அத்துமீறி மீன் பிடித்ததை தட்டிக் கேட்ட பாதுகாப்புப் படை வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம், சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த துறைமுகத்தில் 24 மணி நேரமும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் பார்தீப் பட்டாரி, துறைமுகத்தில் கடலோரமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, தடை செய்யப்பட்ட இடத்தில், எண்ணூர் அருகே தாழங்குப்பத்தைச் சேர்ந்த செல்வகுமார்(34), குப்பன்(48), சந்தோஷ்(24) ஆகிய 3 பேர் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை பார்தீப் பட்டாரி தட்டிக் கேட்டார்.இதனால், கோபமடைந்த மீனவர்கள் 3 பேரும், துடுப்பால் பார்தீப் பட்டாரியைத் தாக்கினர். இதில், காயமடைந்த பார்தீப் பட்டாரி, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மீஞ்சூர் போலீஸார், செல்வகுமார், குப்பன், சந்தோஷ் மூவரையும் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT