Published : 02 Jul 2014 08:26 AM
Last Updated : 02 Jul 2014 08:26 AM

மவுலிவாக்கம் கட்டிட விபத்து: ஆபத்தான நிலையில் உள்ள 12 மாடி கட்டிடத்துக்கு ‘சீல்’

இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகில் இருந்த 12 மாடி கட்டிடத்துக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் கடந்த 28-ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் அருகில் கட்டப்பட்டுள்ள 12 மாடி கட்டிடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 நாட்களாக ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் இருந்து துகள்களை எடுத்து ஆய்வு செய்ததில், கட்டிடம் தரமற்றது என்றும், பாதுகாப்பானது அல்ல என்றும் தெரியவந்தது. இதையடுத்து 12 மாடி கட்டிடத்துக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி செவ்வாய்க்கிழமை காலை அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் 12 மாடி கட்டிடத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த கட்டிடத்துக்கு சீல் வைத்தனர். கட்டிடத்திற்குள் யாரும் செல்லாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் போடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x