Published : 18 Nov 2017 10:44 AM
Last Updated : 18 Nov 2017 10:44 AM
வணிகர் சங்கங்களின் பேரவை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று பெரம்பலூர் வந்திருந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை ஜிஎஸ்டி-தான். வரி குறைப்பு என்பது வெறும் கண்துடைப்பு. ஜிஎஸ்டியால் உள்நாட்டு வணிகம் சீரழிந்துவிடும்.
ஜிஎஸ்டியை கைவிடக் கோரி 2018 ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்புடைய வணிக நிறுவனங்களில் கருப்புக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடைபெறும்.
உணவுப் பொருட்கள் முன் பேர வணிகத்தை தடை செய்ய வேண்டும். நாடு மிகவும் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் புரட்சி வெடிக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT