Published : 15 Jul 2023 03:34 PM
Last Updated : 15 Jul 2023 03:34 PM

கோவையில் எய்ம்ஸ் தேவை: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் நேரில் முன்வைத்த அரசின் 14 கோரிக்கைகள்

டேராடூன்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்தித்து, அவரிடம் 14 கோரிக்கை கொண்ட மனுவை தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்தார்.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் 15-வது சுகாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டுள்ள தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம், தமிழக அரசின் 14 கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தார். அதன் முக்கிய அம்சங்கள்:

  • மருத்துவக் கல்வி சேர்க்கை கொள்கை மற்றும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கு (நீட்) எதிர்ப்பு.
  • கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி கோருதல்.
  • 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவுதல்.
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் நிறுவுதல்.
  • மருத்துவப் பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபணை.
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ பட்டதாரி படிப்புகளுக்கான உத்தேச பொது கலந்தாய்வுக்கு ஆட்சேபணை.
  • காலியாக உள்ள அனைத்து இந்திய எம்.பி.பி.எஸ் இடங்கள் மாநிலத்துக்கு ஒப்படைக்கப்படும்.
  • 50 புதிய கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
  • 50 புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
  • 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல்.
  • 1000 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
  • 1000 துணை சுகாதார நிலையங்கள் நிறுவுதல்.
  • சென்னை - ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட முக்கிய மருத்துவ சேவைக் கட்டிடம் நிறுவுதல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x