Published : 22 Oct 2017 10:01 AM
Last Updated : 22 Oct 2017 10:01 AM
சென்னையில் உள்ள பாடியநல்லூர் எம்.ஏ.நகரில் சரவணன் என்பவருக்கு ரூ.50 லட்சம் மதிப்பில் வீட்டுடன் கூடிய நிலம் இருந்துள்ளது. இதை மயிலாப்பூரை சேர்ந்த ரஜினி (38) என்பவர் போலி ஆவணம் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதாக சென்னை காவல் ஆணையரிடம், சரவணன் புகார் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் மல்லிகா மேற்பார்வையில் நில மோசடி தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஆப்ரகாம் குரூஸ் விசாரித்தார். நிலம் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்டதால் ஏலகிரியில் பதுங்கி இருந்த ரஜினி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய சுரேகா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT