Published : 23 Nov 2023 06:00 AM
Last Updated : 23 Nov 2023 06:00 AM
தீபாவளியை ஒட்டி சென்னை தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. பட்டணம் கிராமங்களுக்குப் போய்விட்டது. தஞ்சாவூரில் படித்து புதுவைக்குச் சென்றுவிட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், அடிக்கடி தஞ்சை வந்து ப்ரகாஷ் நடத்திய யுவர் மெஸ்சில் தங்கிச் செல்வது வழக்கம். “சட்டை உரித்துப் போவதற்காகத் தஞ்சாவூருக்கு வந்திருக்கிறேன்!” என்பார் மெல்லியச் சிரிப்புடன் பிரபஞ்சன். நான் சென்னை வந்து 30 ஆண்டுகளுக்கு மேலான போதிலும் ஆண்டுக்கு இரண்டு, மூன்று முறையாவது தஞ்சாவூர் அருகில் உள்ள கிராமத்துக்குச் சென்று ‘சட்டை உரித்துக் கொண்டு’ வருவது வழக்கம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டபோது என் நண்பரும் என்னுடன் வந்தார. ஒரத்தநாடு போகிற வழியில் அந்தக் குக்கிராமம், நகரத்தின் ஒப்பனைகள் இன்றி இருந்தது. நான் படித்த பள்ளி. மூங்கில் பிளாச்சு வகுப்பறை. தெருக்கோடியில் நாங்கள் குடியிருந்த வீடு. நால்ரோடு என்று அழைக்கப்படும் கடைத்தெரு. தேநீர்க் கடைகள். கண்ணாடிப் பெட்டிக்குள் கார சேவு, பஜ்ஜி, போண்டா வகையறாக்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT