Published : 30 Jan 2024 06:03 AM
Last Updated : 30 Jan 2024 06:03 AM

ப்ரீமியம்
தமிழ் இனிது - 32: முகம் ‘சுழிக்க' வைக்கலாமா?

சுளித்தல் - சுழித்தல்: தமிழாசிரியர் முனைவர் மகா.சுந்தர், ‘முகம் சுளித்தல்’ என்பதை, பலரும் ‘சுழித்தல்’ என்றே எழுதுவதாக வருத்தப்பட்டார், உண்மைதான். ‘மனநிறைவு இன்மை’யை முகத்தில் காட்டுவதை, ‘முகம் சுளித்தல்’ என்பார்கள். கோவக் குறிப்பை, ‘முகம் கறுத்தான் / கண் சிவந்தான்’ என்பர். எனினும், ‘சுழித்தல்’ என்பது தவறான வழக்கு, ‘சுளித்தல்’ என்பதே சரி. ‘ளி-ழி’ குழம்பியது எப்படி? நம் தமிழர்களின் உச்சரிப்புச் சிறப்பு, ‘உலகப் புகழ்’ பெற்றதாயிற்றே. பழம்-பலமாகும், உளுந்து-உழுந்தாகும்.

அதுவே நாளடைவில் எழுத்திலும் வந்து குழப்பும். பொருளில் தெளிவாகக் கவனமாக இருந்தால், எழுத்துப் பிழையும் குறையும். உதடு ‘சுழிப்பது’ என்றால், நெருங்கியவரிடம் ‘பொய்க்குறிப்பு’ காட்டுவது. ‘சுழி’ என்பது ‘இன்மை’ (0-ZERO) என்பதற்கான அழகு தமிழ்ச் சொல். இதை, ‘பூஜ்ஜியம்’ என்று சொல்வது, ‘முகம் சுளிக்க’ வைக்காதோ?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x