அன்னை தெரசாவும் நானும் | புதிய வானம் புதிய பூமி

அன்னை தெரசாவும் நானும் | புதிய வானம் புதிய பூமி
Updated on
1 min read

பத்து வருடங்களுக்கு முன் மதுரையிலிருந்து மைத்துனர் குடும்பத்தினர் திருநெல்வேலி வந்து இரவு எங்களுடன் தங்கிவிட்டு மறுநாள் கன்னியாகுமரிக்கு ஒருநாள் சுற்றுலா செல்வதாகத் தகவல் வந்தது. ‘கன்னியாகுமரியில் மெழுகுச் சிலைகள் தத்ரூபமாக இருக்குமாம்’ என என் கணவரிடம் சொன்னேன். என் ஆசையைப் புரிந்துகொண்டவர் “சரி... நாமும் போவோம்” என்றார்.

அந்த நாளும் வந்தது. அதிகாலையிலேயே கன்னியாகுமரிக்குச் சென்றோம். கண்காட்சியில் ஓரிடத்தில் ‘7D ஷோ’ என்கிற அறிவிப்பைப் பார்த்ததும் உள்ளே நுழைந் தோம். காட்சிகள் அபாரம். பல முறை திரையினுள் நுழைந்து வெளியேறினோம். திரையில் மழை பெய்தபோது பார்வை யாளர்களும் நனைந்தோம். அப்படி ஓர் ஏற்பாடு!

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in