இந்தியர்கள் உலகுக்குக் காட்டிய புலிட்சர் கதைகள்

இந்தியர்கள் உலகுக்குக் காட்டிய புலிட்சர் கதைகள்
Updated on
3 min read

லக்​னோவைச் சேர்ந்த நரம்​பியல் மருத்​து​வர் ருச்​சிகா டாண்​ட​னுக்கு ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்​தது. மறு​முனை​யில் காவல் அதி​காரி எனத் தன்னை அறி​முகப்​படுத்​திக்​கொண்ட ஒரு​வர், “உங்​கள் தொலைபேசி எண்​ணின் மீது 22 குற்​றப்​பு​கார்​கள் உள்​ளன. உங்​கள் வங்​கிக் கணக்​கு​கள் ஜெட் ஏர்​வேஸ் நிறு​வனத்​தின் நரேஷ் கோயல் என்​பவரின் பணமோசடி வழக்​கில் பயன்​படுத்​தப்​பட்​டிருக்​கலாம். நீங்​கள் இப்​போது ‘டிஜிட்​டல் கைது’ செய்​யப்​பட்டு விசா​ரணை​யில் இருக்​கிறீர்​கள்” என்​றது அந்​தக் குரல். அடுத்த எட்டு நாட்​கள், அந்​தப் பெண் மருத்​து​வர் தனது திறன்​பேசி​யின் வீடியோ கால் கண்​காணிப்​பிலிருந்து விடுபட முடிய​வில்​லை.

அவருடைய ஒவ்​வொரு நகர்​வும் அந்​நியக் குரல்​களால் கட்​டுப்​படுத்​தப்​பட்​ட​தால், அவர் பரி​தாபத்​துடன் அந்​தக் குரல்​களையே பின்​பற்​றி​னார். தாயாரிடமோ, சக மருத்​து​வரிடமோ, யாரிட​மும் உண்​மை​யைச் சொல்ல முடி​யாத ஒரு தனிமைப் பிடி​யில் சிக்​கி​னார். வீட்​டின் கதவு திறந்தே இருந்​தா​லும், வீட்​டின் ஒரு மூலை​யில் அவர் சிறை​யில் இருந்​தார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in