Published : 08 Jan 2023 11:37 AM
Last Updated : 08 Jan 2023 11:37 AM

ப்ரீமியம்
கிராமத்து அத்தியாயம் - 7: குளம் பெருக வேண்டும்

பாரததேவி

நரிக்குடியில் மழை பெய்யாமல் பூமி வறண்டு, நிலம் காய்ந்து கனப்பரந்து கிடந்தது. அந்த ஊர்க்காரர்களுக்கு ரொம்ப நாளாக ராமேசுவரத்தைப் போய்ப் பார்க்க வேண்டுமென்று ஆசை. சரி இப்பத்தேன் மழை இல்லை, நம்ம போயி ராமேசுவரத்தைப் பார்த்துவிட்டு வந்துவிடுவோமென்று ஊரோடு கட்டுச் சோறு கட்டிக்கொண்டு பச்சைப்புள்ளைகள் தவிர்த்து ஊரே கிளம்பிவிட்டது. ஒவ்வொருவர் தலையிலும் பெரிய பெரிய புளியோதரை கட்டுச்சோறு இருக்க அதனுள் புளி சேர்த்து அரைத்த கடுகுத் துவையல் செரட்டை நிறைய மணத்தது.

வண்டிமாடு கட்டிக்கொண்டு போனால் நடை மிச்சமாகும், சீக்கிரத்தில் வந்துவிடலாம் என்று மாட்டு வண்டியைக் கட்டி அதில் ஏறிக்கொண்டு போனார்கள். வழக்கம்போல் காட்டுக்காகத் தினமும் நடந்த காளைகள் இப்போது பாதை மாறியதால் திகைத்து நின்றன. ராமேசுவரம் போகுமுன்னே இருட்டிவிட்டது. இவர்கள் புளியோதரையைத் தின்றுவிட்டு மாடுகளுக்கு வண்டிகளுக்கு அடியிலிருந்த கூளத்தைப்போட்டுவிட்டுப் படுத்தார்கள். அப்போது அங்கம்மா ‘அடியே நெலா பாலா அடிக்கு. குமரிகள்லாம் பாட்டு பாடுங்க. உறக்கம் நல்லா வரும். வந்த அலுப்பும் தீந்துபோகு’மின்னு சொல்ல சித்தராங்கிதான் முதலில் பாடினாள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x