Last Updated : 04 Jun, 2023 09:30 AM

 

Published : 04 Jun 2023 09:30 AM
Last Updated : 04 Jun 2023 09:30 AM

ப்ரீமியம்
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 1: ஆதியில் ஒன்றாகத்தான் இருந்தோம்

ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகளைக் கற்பித்து, பெண்ணைவிட ஆண் பலசாலி என்று நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். அது உண்மையா? பல்லாயிரம் ஜீவராசிகளைக் கொண்ட நம் உலகில், வெகு சில வகைகளைத் தவிர மற்ற எல்லா வகையான ஜீவராசிகளுக்கும் இனப்பெருக்கத்துக்கான வழியாக உடற்கூறு அடிப்படையில் ஆண், பெண் என்கிற இரு வகைகளை இயற்கை உருவாக்கி இருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளைக் கடந்து நூற்றுக்கணக்கான பாலினப் பிரிவுகள் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் சொல்கின்றன. அவற்றைப் பற்றிப் பிறகு பேசுவோம்.

பெண் - ஆண் ஆகிய இரண்டுக்கும் இருக்கும் வேறுபாடுகளே இவற்றின் ஒற்றுமைக்கும் வழிவகுத்திருக்க வேண்டும். ஆண் உடலில் இல்லாத சில பாகங்களை, தன்மைகளைப் பெண் உடலிலும் பெண் உடலில் இல்லாத சில அம்சங்களை ஆண் உடலிலும் வைத்ததற்குக் காரணம் ஒருவருக்கொருவர் சுவாரசியமாகவும் தேவையாகவும் இருக்க வேண்டித்தான் இருக்கும். இல்லையெனில் மனிதனுக்கும்கூட இனப்பெருக்கத்துக்கு இதுதான் வழி என்று எப்படித் தெரிந்திருக்கும்? இயற்கை உந்துதலில்தானே முதன்முதலாக ஆணும் பெண்ணும் இணைந்திருப்பார்கள்? அப்படிக் கலந்த பிறகுதானே இதன்வழிதான் பிள்ளை பிறக்கும் என்பது மனிதருக்குப் புலப்பட்டிருக்கும்? நம்மளவு சிந்திக்கத் தெரியாத மற்ற உயிரினங்களும் இனப்பெருக்கம் செய்வது அந்த இயற்கை உந்துதலால்தான் இல்லையா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x