Published : 27 Apr 2022 12:05 PM
Last Updated : 27 Apr 2022 12:05 PM
அதீதக் கண்டிப்பு
அதீத அன்பு போல் ஆபத்தானது அதீதக் கண்டிப்பு. குழந்தைகளை நல் வழிப்படுத்துகிறேன் என அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கும்போது குழந்தைகளின் மன நலம் மிகவும் பாதிக்கப்படும். தன் உணர்வுகளை உள்ளுக்குள் அடக்கி, ஊறுபடத்தக்க ஆளுமையாக மாற வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் தன்னம்பிக்கைத் திறனும் பாதிக்கப்படும். குழந்தைகளிடம் கடும் வார்த்தைகளால் கண்டிப்புடன் பேசாமல், அடிக்காமல் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். அவர்கள் அடம்பிடித்தால் அது தவறு என்பதை உறுதியுடன் தெரிவியுங்கள். அவர்கள் அதைத் திரும்பப் பெற முயல்வார்கள். ஆனால், நீங்கள் உறுதியாக இருந்து பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும். குழந்தைகளுடன் கண்டிப்பாக நடந்துகொண்டால் அது அவர்களைப் பொய் சொல்பவர்களாக ஏமாற்றுபவர்களாகக்கூட மாற்றக்கூடும். அதனால் அதைத் தவிர்க்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT