Published : 15 Oct 2023 07:55 AM
Last Updated : 15 Oct 2023 07:55 AM
கைக்கு எட்டிய பொருள்களை வைத்து உணவுக்கு உயிரூட்டுவதில் என் அம்மாவுக்கு நிகர் அவருடைய அம்மா மட்டுமே. உணவு குறித்த கதைகளை அம்மா சொல்லச் சொல்ல அவற்றை ருசித்த உணர்வு ஏற்படும். அவர் தன் சிறு வயதில் சாப்பிட்டதாகச் சொல்லும் சில உணவுப் பண்டங்களை, நான் பார்த்ததுகூட இல்லை.
அம்மா வீட்டில் ஜனக்கட்டு அதிகம். காய்கறிகளை விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். கழனிக் காட்டில் விளைபவைதான் அடுப்பில் வேகும். கழனியில் விளையும் ‘பிச்சக்காய்’ என்று ஒரு வகைக் காயை உப்பு சேர்த்து வேகவைத்துச் சாப்பிடுவார்களாம். சட்டி நிறைய இருக்கும் அந்தக் காய்தான் அந்நாளில் அவர்களின் பசியைப் போக்குவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT