Last Updated : 30 Jul, 2023 08:20 AM

 

Published : 30 Jul 2023 08:20 AM
Last Updated : 30 Jul 2023 08:20 AM

ப்ரீமியம்
பதினாறு கண்ணுடையாள் எங்கள் தாய்...

நாளேடுகளிலும் வானொலி, தொலைக்காட்சி செய்திகளிலும் மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிலவரத்தைத் தேடிக்கொண்டிருந்த காவிரிப் படுகை மக்கள், இன்று மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிவிட்டனர். வண்டலைக் குவித்து வளம் சேர்த்த காவிரி, காலத்தின் கட்டளைக்காகக் காத்து நிற்கிறாள்.

ஆறுகளின் அருங்குணங்களுக்கு விதிவிலக்கு இன்றி, காவிரியிலும் வெள்ளம் பெருக்கெடுத்தோடி, பேரழிவுகள் நிகழ்ந்தது உண்டு. நூறாண்டுகளுக்கு முன்னர் 1924இல் காவிரி ஓடிவரும் வழியெல்லாம் பெருவெள்ளம். கணக்கிடவியலா பேரழிவு. அன்று பாடப்பட்ட வெள்ளச் சிந்துகள் இன்னும் அதை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. திருச்சியில் மலைக் கோட்டைக்குச் செல்லும் பெருங்கதவு வரையில் தண்ணீர் தேங்கி நின்றதை அன்றைய பத்திரிகைச் செய்திகள் எடுத்துக்காட்டுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x